கொவிட்-19

மொடர்னா சிங்கப்பூர், ‘யூகவ்’ அமைப்புடன் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 40 விழுக்காட்டினர், மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.
மணிலா: கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, அதிக அளவில் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் அவற்றின் திறன் குறைந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசை வென்றுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களைக் காட்டிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சிறப்பாகச் செயல்பட்டதற்கு சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டின் திறன்வாய்ந்த தலைமைத்துவம் முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.